மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்!!
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுப்படவுள்ளன.
டெல்லி, ஜந்தர் மந்தர் மைதானத்தில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில நடைபெறவுள்ள குறித்த போராட்டத்தில்,
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
“மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தற்போது நன்கு உணர்ந்துள்ளார். ஆகையால் மக்களை தன்பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையில் தற்போது ஈடுப்பட்டு வருகின்றார்.
அதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்தி மக்களை ஏமாற்ற மோடி முனைகின்றார்.
ஆகையால், அவருடைய செயற்பாடுகளை கண்டித்து மக்களுக்கு உண்மையான நிலவரத்தை எடுத்து கூறுவதற்காகவே இப்போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இதேவேளை இன்னும் 15 நாட்களில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு விடும். இதனால் நாட்டில் மாற்றத்தை விரும்புகின்றோம் அதற்கு புதிய அரசொன்றே தற்போதைய சூழ்நிலையில் தேவை” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குகொள்வார்களெனவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
டெல்லி, ஜந்தர் மந்தர் மைதானத்தில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில நடைபெறவுள்ள குறித்த போராட்டத்தில்,
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
“மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தற்போது நன்கு உணர்ந்துள்ளார். ஆகையால் மக்களை தன்பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையில் தற்போது ஈடுப்பட்டு வருகின்றார்.
அதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்தி மக்களை ஏமாற்ற மோடி முனைகின்றார்.
ஆகையால், அவருடைய செயற்பாடுகளை கண்டித்து மக்களுக்கு உண்மையான நிலவரத்தை எடுத்து கூறுவதற்காகவே இப்போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இதேவேளை இன்னும் 15 நாட்களில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு விடும். இதனால் நாட்டில் மாற்றத்தை விரும்புகின்றோம் அதற்கு புதிய அரசொன்றே தற்போதைய சூழ்நிலையில் தேவை” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குகொள்வார்களெனவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை