பிரிகேடியர் கடாபியின் தாயார் இயற்கை எய்தினார்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்தளபதி மாவீரர் பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் இன்று (08.03.19) யாழ்ப்பம் நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்துள்ளார்.வன்னி இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை இருந்த இடத்தை சிங்களப் படைகள் முற்றுகையிட்டுத் உக்கிர சமர் நடந்த போது முற்றுகையை உடைத்து தேசியத் தலைவரை பாதுகாப்பாக நகர்த்திய தங்கள் உயிரை ஈய்ந்த வீரத் தளபதிகளில் பிரிகேடியர் கடாபியும் ஒருவர்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தனது மகனை கொடுத்த தாயார் சர்வதேச மகளிர் நாளான இன்று காலமாகியுள்ளார். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது இறுதிக்கிரியைகள் நாளை(09/03/2019) நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்த இவரை அக்களமுனையிலிருந்து அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது முடியாமல் போகவே தமிழீழப் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக் கொண்டவர் என்பது நினைவூட்டத்தக்கது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தனது மகனை கொடுத்த தாயார் சர்வதேச மகளிர் நாளான இன்று காலமாகியுள்ளார். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது இறுதிக்கிரியைகள் நாளை(09/03/2019) நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை