யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாவடிவேம்பு -2, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை பஞ்சாயுதம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வழமை போன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த சமயம்  திடீரென காட்டுப்பகுதியிலிருந்து வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.