நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தமைக்கான நோக்கம் என்ன??

நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தமைக்கான நோக்கம் நிறைவேறாது போய்விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமெனில் இரண்டு பெரியக் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெயாங்கொட பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பல்வேறு நோக்கங்களை இலக்காகக் கொண்டே நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினோம்.
இந்த கனவை நிறைவேற்றவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்து ஒன்றாக இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தோம்.
இதில் அன்று பலன்கள் இருந்தன. மக்கள் எதிர்ப்பார்த்தவற்றை எமது 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றினோம்.
இதனை இவ்வாறே கொண்டுசென்று நாட்டை அபிவிருத்திப் பாதையின் முன்னேற்றுவதே எமது நோக்கமாக இருந்தது.
ஆனால், தற்போது அந்தக் கனவு அழிவடைந்துள்ளது.  இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டுள்ளவர் என்ற வகையிலேயே, நான் இதுதொடர்பாக கவலையடைகிறேன்.
இலங்கையின் இரண்டு பெரியக் கட்சிகள் எதிர்க்காலத்திலேனும் ஒன்றிணைந்து, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும்.
அல்லாவிட்டால் எம்மால் இனியும்  முன்னேற முடியாது என்பதே உண்மையான நிலவரமாகும்.
இதுதொடர்பாக நான் கருத்து வெளியிட்டால், என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.
இவற்றை நான் பொருட்படுத்தப்போவதில்லை. நான் இறக்கும்வரையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகத்தான் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.