மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் வாக்கெடுப்பு தோல்வி!!
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பு மீண்டும் நடைபெறவுள்ளது.
முதற்கட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ள நிலையிலலேயே மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப அதிக நிதி தேவைப்படும் என்பதால், இத்திட்டத்திற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ள நிதியை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து நாட்டின் தெற்குப் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 182 பேரும், எதிராக 245 பேரும் வாக்களித்தனர். இதனால் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு தோல்வி ஏற்பட்டது.
இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப், ஜனாதிபதிக்கு உண்டான சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் வீட்டோ அதிகாரத்தை அனுமதித்தல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 26 ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முதற்கட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ள நிலையிலலேயே மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப அதிக நிதி தேவைப்படும் என்பதால், இத்திட்டத்திற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ள நிதியை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து நாட்டின் தெற்குப் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 182 பேரும், எதிராக 245 பேரும் வாக்களித்தனர். இதனால் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு தோல்வி ஏற்பட்டது.
இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப், ஜனாதிபதிக்கு உண்டான சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் வீட்டோ அதிகாரத்தை அனுமதித்தல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 26 ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை