அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் இலங்கைக்கு வருகை!!

அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானமொன்று மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.


அதன்படி குறித்த கடல்சார் கண்காணிப்பு விமானம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி இலங்கையில் தரையிரங்கவுள்ளதாக அவுஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சியான் உன்வின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவில் நடவடிக்கை ஒன்றுக்காக புறப்படுவதற்கு முன்னதாக இந்த கண்காணிப்பு விமானம், ஏப்ரல் 1ஆம் திகதி இரவு மத்தலவில் தரையிறங்கவுள்ளது.
இதன்போது, கடல்சார் கண்காணிப்பு விவகாரங்கள் தொடர்பாக இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையுடன் அவர்கள் ஈடுபாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அத்துடன், இந்தோ-பசுபிக் முயற்சி-2019இன் கீழ், மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று பின்னர் பயணம் மேற்கொள்ளும்” என்றும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.