வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கைது!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர்.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞரும், கண்டி பிரதேச்தை சேர்ந்த 64 வயதான நபரும், கடுகன்னாவை சேர்ந்த 52 வயதான நபர்களும், சென்னையை சேர்ந்த 6 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 கரட் அடங்கிய 59 தங்கக்கட்டிகளை உடலில் வைத்து மறைத்து கொண்டு வந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.