ஆந்திராவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு!!

ஆந்திராவில் பாரவூர்தியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகில் எதிரே வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியது. இவ்விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.

இதனால், சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. பேருந்தின் முன்பகுதி நொருங்கியதுடன் அதன் இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்து ஏற்பட்டதும் இரு வாகனங்களின் சாரதிகளும் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.