கன்னியா போராட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு சிறீலங்கா இராணுவம் மற்றும் பொலிசார் கெடுபிடி!!📷

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து சென்ற வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பேருந்துகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது வழியில் புல்மோட்டை பகுதியில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை திருகோணமலை வீதியிலும் 3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு பேருந்துகளில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு போராட்டத்திற்கு செல்பவர்களையும் பேருந்துகளையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பேருந்தை வழிமறித்து படையினர் மற்றும் போலீசார் பரிசோதனைகளை செய்தபின் பேருந்தின் முன் சில்லுக்கு காற்று போகும் விதமாக இரகசியமாக கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொண்டார்கள். இதனால் போராட்டத்துக்கு செல்பவர்கள் வழியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு அச்சமடைந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது..
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.