கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!📷


 யாழ். கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன்  அருளாட்சி புரியும் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று15.07.2019(திங்கட்கிழமை) நடைபெற்றது.


நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர்.கடந்த தொடர்ந்து  அம்மன், பிள்ளையார் முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா முழக்கத்தோடு முத்தேர்களும் வலம் வந்தன.


இதேவேளை  ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.