இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஷிரந்தி ராஜபக்ஷவும்!

மஹிந்த ராஜபக்ஷவின் அனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த 11ஆம் திகதி, சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் கோத்தாவுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமாயின், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நிறுத்துவதற்கே முன்னதாக கலந்துரையாடப்பட்ட நிலையில், கோத்தா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாநாட்டில், மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் பங்கேற்றிருந்த நிலையில், சமல்,பசில்,கோத்தா ஆகியோரின் பாரியார் எவருமே அதில் பங்கேற்கவில்லை.

அதேபோல, யோசித்த, ரோஹித ஆகியோரின் மனைவிகளும் பங்கேற்காதபோதும், , மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மட்டுமே பங்கேற்றிருந்ததோடு அவர் ,பிரதான மேடையிலேயே, அமர்ந்திருந்தார்.

ஆகையால், ஏதாவது சட்டசிக்கல் ஏற்பட்டு, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியாமல் போனால், மஹிந்தவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவை நிறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.