நாடாளுமன்றத்தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு!!

ஏப்ரல்21 தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளது.


நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் விசாரணை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த மாதம் 23 ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், தெரிவுக் குழுவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 23 ஆம் திகதி வரையில் நீடிக்க நேர்ந்துள்ளதாக அதன் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுவின் பணிகளை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், இந்த தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டப்பட உள்ளது.

அன்றையதினம் சாட்சி வழங்கவுள்ளவர்கள் தொடர்பாக இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையில், முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டியவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்தபோதும், மின்சார சபையிடம் இருந்து மின்சார கொள்வனவின் போதும் ஏற்பட்ட மோசடி மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடு குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.