மௌனத்தின் காத்திருப்பு!

உன்னைக் காணவே
எனக்குள் தேடுகின்றேன்
இதழ்மூடிய மலருக்குள்
மகரந்தமாயும் முத்தாகவும்

என்மீது மோதும்
தென்றலில் தேடுகின்றேன்
உன் மடிசாய்ந்த பொழுதில்
என் மீதான உன் தொடுதல்
ஸ்பரிசங்களில் சிலிர்த்துக்கொண்ட
உணர்வுகளையும் தேடுகின்றேன்!
எல்லையில்லாத வானத்தில்
இருள்விலக்கும் நிலவாய்
உதித்து வந்த போதெல்லாம்
என் கண்களுக்குள் தேடுகின்றேன்
மலர்வாடிய போதெல்லாம்
மணம் விலகாத நினைவுகளை
மீண்டும் முகர்ந்து கொள்கிறேன்
எனது கனவு மாளிகையில்
விலகிச்சென்ற கணப்பொழுதுகளில்
விட்டுச்சென்ற நினைவுகளையும்
எடுத்துச்சென்ற இதயத்தையும்
திரும்ப பெறுவதற்காக
காத்திருக்கும்
வெறுமையான வழித்தடத்தில்
மௌனத்தின் காத்திருப்பு!
மீள்பவி!!!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.