‘தகவல் மாதம்’ பிரகடனம்- அமைச்சரவை தீர்மானம்!

சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 12இன் கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கான சட்டம் தற்பொழுது உலகில் சிறந்த 4ஆவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் சட்டம் நடைமுறைப்படுத்தும் அடிப்படை பொறுப்பை கொண்டுள்ள வெகுஜன ஊடக அமைச்சினால் இதை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 28ஆம் திகதி இடம்பெறும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்திற்கு அமைவாக செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை ‘தகவல் மாதம்’ என்று பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்குள் இந்த சட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கும் இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் சிவில் பிரஜைகளை தெளிவு படுத்தும் வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ‘கிராமத்திற்கு தகவல் உரிமை’ என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவைகளை 5 மாவட்டங்களைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.