எதிர்ப்பாளர்களை வானிலை அறிக்கையாளர்களாக்கிய எழுக தமிழ்-2019!

எழுக தமிழ்-2019 நடக்கவே நடக்காது என்றார்கள்!
எழுக தமிழ்-2019 இற்கு யாரும் ஆதரவு வழங்கவேமாட்டார்கள் என்றார்கள்!
எழுக தமிழ்-2019 வெற்றி பெறவே பெறாது என்றார்கள்!
எழுக தமிழ்-2019 இற்கு மக்கள் யாரும் வரவே மாட்டார் என்றார்கள்!
முப்பது நாட்களுக்குள்ளானதாக எதிர்வுகூறல்கள் அனைத்தும், 'வரும் ஆனால் வராது' பாணியிலான வானிலை அறிக்கையாகிப் போனது. அந்தோ பரிதாபம்.



இப்ப என்னடா எண்டால் நூறென்கிறார்கள்... சில நூறுபேரென்கிறார்கள்... இல்லை இல்லை ஆயிரம் பேரென்கிறார்கள்... அதுவும் இல்லை சில ஆயிரம் பேரென்கிறார்கள்...

எது எப்படியோ எழுக தமிழை பேசுபொருளாக சமூக மட்டத்தில் உயிரோட்டமாக கடத்திக்கொண்டிருக்கும் அன்படியார்களுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

இது தான் பொங்கு தமிழ் வழிவந்த எழுக தமிழின் வெற்றியாகும். எதிர்க்க நினைத்தவர்கள் கூட, தோற்க வேண்டுமென பேரவாவுடன் காத்திருந்தவர்கள் கூட அது குறித்து தொடர்ந்தும் பேசியாக வேண்டும் என்ற புறச்சூழலை ஏற்படுத்தியமை எழுக தமிழின் குன்றா மகிமையாகும்.

எழுக தமிழின் எழுகை தொடரும்!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.