ஆணைக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!!

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பிலான காரணங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஜராகவுள்ளார்.


தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றே விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை தெரிவுக்குழு விசாரணைகளை, அறிக்கையிடுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது ஊடகங்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி அளித்த சாட்சியம் தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.