ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இரு அணிகளும் மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ஓட்டங்களும் ஆஸ்திரேலியா 225 ஓட்டங்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 329 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 399 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் நேற்று முன்தினம் சமன் செய்தது.

1972ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடர் சமன் ஆகியுள்ளது. எனினும், நடப்பு வெற்றியாளர் என்ற வகையில் ஆஷஸ் கிண்ணத்தை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டுள்ளது.

1938, 1962-63, 1965-66, 1968 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஆஷஸ் தொடர்களும் சமநிலையில் முடிந்தது நினைவுகூரத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.