எம்மை தாங்கொணாத்துயரில் தள்ளிவிட்டு எம்மைவிட்டு பிரிந்து சென்றிருக்கும் ஏரம்பு இரத்தினவடிவேல் ஐயா!

எம்மை தாங்கொணாத்துயரில் தள்ளிவிட்டு  எம்மைவிட்டு பிரிந்து சென்றிருக்கும் ஏரம்பு இரத்தினவடிவேல் ஐயாவிற்கு வீரவணக்கம்

தமிழ்த்தேசத்தின் விடுதலையை இறுதிவரை நேசித்த ஒப்பற்ற மாமனிதரை நாம் இழந்து தவிக்கின்றோம் கடற்புலிகளின் மூத்த போராளியாக இருந்து உறுதியோடு உழைத்த உன்னத மனிதன் இன்றுவரை அதே மன உறுதியோடு தமிழ்த்தேசியமக்கள் முன்னணியுடன் இணைந்து எமது தேசத்தின் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்த வயதில் முதிர்ந்த இளமைப்போராளி

தாயகத்தின் அத்தனை போராட்டங்களிலும் இவர் தடமிருந்தது கேப்பாப்பிலவு நிலமீட்பு போராட்டத்தில் அந்த மக்களோடு இரவு பகலாக நின்று போராடியவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களது அனைத்துப்போராட்டங்களிலும் பங்கெடுத்தவர் கடந்த மாவீர்ர் நாளிலே தேவிபுரம் மாவீர்ர் துயிலும் இல்லத்தினை அடையாளப்படுத்தி மாவீர்ர் நாள் நினைவேந்தல் சிறப்புற நடைபெற அயராது உழைத்தவர் தனது பிள்ளைகளின் நிதியுதவி மூலம் ஏழை மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாய் நின்றவர் தூயகரங்கள் என்னும் அமைப்பை உருவாக்கி  முன்னாள் போராளிகள் ஏழை மக்கள் போன்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் பல வழங்கியவர் தன்னுடைய 72 வயதிலும் இரவு பகல் பாராது தமிழ்தேசத்தின் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்த இமயம் சரிந்தது தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தந்தையாய் எமை அரவணைத்த தம்பி ஐயாவே இந்த தமிழ்த்தேசம் உள்ளவரை நேற்றுப்போல் இன்றும் என்றும் உயிர்வாழ்வீர்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.