தவம் நினைவு குறும்பட விழா.கால எல்லை நீடிப்பு அறிவித்தல்!!

எமது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் வணக்கம்!

மாவீரன் லெப்.கேணல் தவம் / தவா நினைவான குறும்படப் போட்டி நிகழ்வை சில முக்கியமான காரணங்களுக்காக கால நீடிப்பு செய்துள்ளோம். இதன்படி போட்டி நாள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலும், விண்ணப்ப இறுதிநாள் ஜனவரி மாதம் வரையிலும் பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்களை மிக விரைவில் தருகிறோம்.

எமது அழைப்பை ஏற்று ஏற்கனவே விண்ணப்பித்திருந்த கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தவம் குறும்பட விழாவில் மேலும் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு புதுப் பொலிவுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் (2020) லெப்.கேணல் தவம் அவர்கள் வீரச்சாவடைந்த அதே வாரத்தில் அவர் நினைவுடன் சிறப்பாக நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம். நன்றி.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.