தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு:நாம் தமிழர் கட்சி!!

‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 18-09-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடத் திருவுருவச் சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம்
செய்யவிருக்கிறார்.

அவ்வயம் அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 18-09-2019 புதன்கிழமை, காலை 10 மணி
இடம்: காந்தி மண்டபம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை
https://goo.gl/maps/z1iak2SUGZB2


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.