மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது மூத்த ஊடகவியலாளரின் உடல்!

தமிழ் பத்திரிகை துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில் காலமானார்.


இரட்னபுரியில் 1933ஆம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த கால பகுதியிலையே பத்திரிகை துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்.

55 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அவர் தனது 84அவது வயதில் 2017ஆம் ஆண்டு பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தனது 86ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அவரின் இறுதி விருப்பப்படி அவரது உடல் யாழ்.மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திடம் கையளிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.