எலிக் காய்ச்சல் காரணமாக 4,060 பேர் பாதிப்பு!
இந்த வருடத்தின் நவம்பர் 04ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் எலிக் காய்ச்சல் காரணமாக 4,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில் 868 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி, மார்ச், ஜுன் ஆகிய மாதங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே மாதத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம்மாதத்தில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 508 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 523 நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த 2018ஆம் ஆண்டில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5,257 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, இம்மாவட்டத்தில் 777 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயிகள், வடிகான்களை சுத்தப்படுத்துவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர், சதுப்பு நிலங்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் விளையாடுவோர் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான பணிகளில் ஈடுபடுவோர் அருகிலுள்ள பொதுச் சுகாதார அலுவலகம் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனையை நாடி, அங்கு வழங்கப்படும் Doxycycline மாத்திரைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, இவ்வாறானவர்கள் வேலை செய்யும்போது அதிகளவான நீர் அருந்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுதல், மிதமான காய்ச்சல், குளிர், தசைப்பிடிப்பு, கடுமையான தலைவலி, சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவை எலிக் காய்ச்சலின் பிரதான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஆரம்பக் கட்டத்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது முக்கியமானதாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில் 868 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி, மார்ச், ஜுன் ஆகிய மாதங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே மாதத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம்மாதத்தில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 508 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 523 நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த 2018ஆம் ஆண்டில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5,257 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, இம்மாவட்டத்தில் 777 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயிகள், வடிகான்களை சுத்தப்படுத்துவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர், சதுப்பு நிலங்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் விளையாடுவோர் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான பணிகளில் ஈடுபடுவோர் அருகிலுள்ள பொதுச் சுகாதார அலுவலகம் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனையை நாடி, அங்கு வழங்கப்படும் Doxycycline மாத்திரைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, இவ்வாறானவர்கள் வேலை செய்யும்போது அதிகளவான நீர் அருந்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுதல், மிதமான காய்ச்சல், குளிர், தசைப்பிடிப்பு, கடுமையான தலைவலி, சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவை எலிக் காய்ச்சலின் பிரதான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஆரம்பக் கட்டத்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது முக்கியமானதாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை