அர்ஜூன மகேந்திரன் ,ரவி கருணாநாயக்க, உள்ளிட்ட 12 பேருக்கு பிடியாணை!!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 12 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் , அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.