"சுபீட்சத்தின் நோக்கு" அபிவிருத்தி திட்டம் தயார்!

பொலன்னறுவை மாவட்டத்தின் ஐந்தாண்டு கால அபிவிருத்தித் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது.
2020 தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட வெளியீட்டு நிகழ்வு பொலன்னறுவை புளதிஸி பௌத்த மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.