கோட்டாபய அரசாங்கத்திற்கு சவால் விடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்!!

நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதென்றும், ஆகஸ்ட் 5 ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கோட்டாபய அரசாங்கத்திற்கு சவால்விடுத்துள்ளார்.

அத்தோடு அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகளில் ஏன் இராணுவத்தினர் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இராணுவமயமாக்கலுடனான ஏகாத்தியத்தியத்தை நோக்கி நாடு செல்கின்றதா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மக்களைப் பற்றி சிறுதும் சிந்திக்காது தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்று தெரிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாகவே இன்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமுமே பொறுப்பு கூற வேண்டும். ஏகாதியத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்லஎன்றும், முடியுமானால் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என சவால் விடுகின்றேன் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயகத்தின் மூலக் காரணியாகும் என்றும் ஆனால் தற்போது அது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறதாகவும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உலகிலுள்ள ஒரு மனிதனின் கொலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மனசாட்சியற்ற விதத்தில் பொலிஸார் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்போது பெண்களும் பாரபட்சமின்றி தாக்கப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பில் தினமும் ஏதேனுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறிய அவர், எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செயற்படவில்லை என்றும் கூறினார்.
மேலு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாத காலத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.