ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு!


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதிவியுயர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் பணிப்பாளரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான பொலிஸ் அத்தியட்சகர் டப்லியு.ஜே.என்.சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.