தேடப்பட்டு வந்த சிறைச்சாலை அதிகாரி CID யில் சரண்!
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (24) சரணடைந்துள்ளார்.
அவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்யுமாறு நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன்படி, இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் அவர் இன்று (25) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை