இந்திய சீன எல்லைப்பகுதியில் பதற்றம் நீடிக்கலாம்!!
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி கால்வன் பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும் பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குக்ராங் நலா, பாங்கோங் ஏரியின் வடக்கு கரை ஆகிய இடங்களில், சீன இராணுவம் அத்துமீறியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.
லடாக்கில் கடந்த ஜூன் மாதம் நடந்த இராணுவ நடவடிக்கைகளை பற்றி மட்டும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இராணுவம் மற்றும் ராஜீய மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து சுமுக தீர்வு எட்டப்படும் வரை எல்லையில் பதற்றம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை