பிரதமருக்கு நாளை குழு அறிக்கை சமர்ப்பிப்பு

 


இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நாளை(15) பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

9 பேர் அடங்கிய குறித்த குழுவுக்கு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.