ரணில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது குற்றச்சாட்டு!!
2018 ம் ஆண்டு ஒக்டோபர் 26 ம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லையென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முதல் தடவையாக சாட்சியமளிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
2015 ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 2018 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தனக்கு ஒரு நூல் ஒன்றைக் கூட எழுத முடியுமென தெரிவித்தார்.
மேலும் 52 நாள் அரசாங்கத்தின் போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபஷவிடம் ,அவருக்கு பாதுகாப்பு சபைக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்ததா என தான் வினவியதாகவும் அவருக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10 மணியளவில் சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இருப்பினும் இடையில் முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சாட்சியமளிப்பு பிற்போடப்பட்டதுடன் இது தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழு எதிர்வரும் 13 ம் திகதி ஆஜராகுமாறு அறிவித்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை