எதிர்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை எதிர்வரும் 13 ஆம் திகதி!

 


எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல அவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும்   வெள்ளிக்கிழமை  நாடாளுமன்ற கூட்டுவதற்கும் அன்றைய தினம் எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும்  நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் என்பன மாத்திரமே நாளை ( வியாழக்கிழமை) இடம்பெறும். நாளை மதியபோசன இடைவேளை இன்றி 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை இடம்பெறும்.

எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.