தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து!


கொழும்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெலிக்கந்தை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு – புனானை COVID – 19 சிகிச்சை நிலையத்திற்கு 23 பேரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்த்து இடம்பெற்றதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார்.

விபத்தில் இரண்டு பஸ்களினதும் சாரதிகள் மற்றும் பஸ்ஸில் ஏற்றிச்சென்ற கொரோனா நோயாளர்களில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காயமடைந்த நோயாளர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் திட்டமிட்டவாறு புனானை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.