அமெரிக்கா மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு!


ஈஸ்டர் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமெரிக்க நீதித்துறை மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

2019 ஏப்ரல் 21, அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இந்த மூன்று பேரும் உள்ளதாக அமெரிக்க நீதித்துறை நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள குழுவுக்கு எதிரான மேற்கத்திய நாடு எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் மொஹமட் நௌபர் என்பவர் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சியாளராக சொற்பட்டவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கன், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிக்க உதவியதாகவும் அஹமட் மில்ஹான் ஹயத்து மொஹமட் தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்றார் என்றும் அமெரிக்க நீதி துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதரவு வழங்கியதாக இந்த மூவர் மீதும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.