மேலும் 567பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!


நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 567 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை மொத்தமாக 72ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் ஐயாயிரத்து 588 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 375ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.