விசேட சலுகைகள் மூலம் சர்வதேச விமான சேவைகளை கவர்ந்திழுக்க திட்டம்!!

 


சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் விமான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் விசேட சலுகை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, விமான சேவை நிறுவனங்களின் விமானங்களை தரையிறக்கல் மற்றும் தரித்து நிற்பதற்கான கட்டணங்களுக்கான சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட நேர அட்டவணைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச வாடகை விமானப் பயண நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் இறக்கம் மற்றும் விமானங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலிருந்து விடுவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த சலுகைக் காலத்தை மேலும் 2021 ஜூலை 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.