கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!


 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இறுதியாக ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதுடன் இரவு 10 மணி வரை 260 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 91 549 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 88 145 பேர் குணமடைந்துள்ளதோடு , 2753 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை இன்று காலை வரை 8 இலட்சத்து 69 709 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.