அமெரிக்கா துமிந்த விடுதலை குறித்து அதிருப்தி!!
மரணதண்டனை பெற்ற முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா, ஜனாதிபதி கோட்டபாயவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அவர் தமதி பதிவில், ‘தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அரசாங்கத்தின் பொறுப்புணர்வு மற்றும் நீதிக்கான சம அணுகல் ஆகியவை ஐ.நா. கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும்’ என ரெப்லிட்ஸ் அம்மையார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை