ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலு்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு – பொறளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் சிறுமியின் உடல் மரண பரிசோதனையின்போதே அவர் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ரிஷாட் பதியூதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 03ஆம் திகதி திடீரென ஏற்பட்ட தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.