திடீரென இலங்கையில் வாகன விலைகள் அதிகரிப்பு!


 இலங்கையில் வாகனங்களின் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வருடத்திலும் வாகன இறக்குமதிக்கு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தடைவிதிக்கப்படவுள்ள நிலையிலேயே வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக பாவித்த வாகனங்களின் விலைகளும் 100 வீதத்தில் உயர்ந்துள்ளன. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பிரீமியோ வாகனமானது தற்போதை விற்பனை விலையாக இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எக்ஸியோ வாகனம் 120 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவுள்ள நிலையில், 15 வருடம் பழைய எக்ஸியோ வாகனத்தின் தற்போதைய விற்பனை விலையாக 65 இலட்சம் குறிக்கப்பட்டுள்ளது.

அதோடு 05 வருடம் பாவித்த விட்ஸ் ரக வாகனத்தின் விற்பனை விலையாக 90 இலட்சம் ரூபா காணப்படுகின்றது. 03 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட வேகன்ஆர் வாகனத்தின் விற்பனை விலை 65 இலட்சமாக உயர்ந்துள்ளது.

அதேவேளை முச்சக்கர வண்டிகளின் விலைகளும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. அதன்படி 03 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட ஓட்டோ விலை 16 தொடக்கம் 17 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் சாதாரண மோட்டார் சைக்களின் விலை 04 இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளதோடு ஸ்கூட்டர் விலையும் இரட்டிப்பாகியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.