ஜேர்மனியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

 


இரம்புக்கனை பகுதியில் தனியாக வசிந்து வந்த வெளிநாட்டுப்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலத்தை இரம்புக்கனை ஹிரிவட்டுன்ன பிட்டவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (15) மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் 65 வயதான சபீன் என்ற ஜேர்மனிய பெண்மணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இலங்கைக்கு 20 வருடங்களுக்கு முன் வந்த குறித்த ஜேர்மனியப் பெண்மணி வத்தளை ஹெடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்துச் செய்துள்ளார் எனவும் 

 விவாகரத்துக்கு பின் 2016 ஆம் ஆண்டு முதல் இவர் இரம்புக்கனை பிட்டவல பிரதேசத்தில் தனியாக இருந்து  செல்லப் பிராணியாக நாய்களை வளர்த்து வந்துள்ளதுடன் அவர் வீட்டில் 12 நாய்கள் இருந்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த இலங்கை வாழ் ஜேர்மனியப் பெண்மணி வீதிகளில் நோய்வாய்பட்டு இருக்கும் நாய்களை வீட்டிற்கு கொண்டு வந்து சிகிச்சையளித்து மீண்டும் வீதியில் சென்று விட்டு வருவார் எனவும், அவர் பிரதேசத்தில் இருக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவைச் சமைத்து கொடுத்து வந்துள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.