பொய்யான தகவலை கூறி மாணவியை வெளி ஏற்றிய அதிபர்!


தந்தைக்கு கொரோனா என பொய்யான தகவலின் பெயரில் மாணவியை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய அதிபருக்கு எதிராக பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

காலை லேல்வல ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்றபோது அவரது தனத்தை கொரோனவால் பாதிக்கப்பட்டதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனை எதிர்த்து மாணவியின் தந்தை நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பில் மாணவியின் தந்தை கூறியதாவது,

"நான் கூலி வேலை செய்து வருகிறேன், எனக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை மகளை பாடசாலைக்கு அனுப்பினேன், அப்போது தனக்கு கொரோனா இருப்பதாக கூறி மகளை திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் மறுநாள் பாடசாலைக்கு அனுப்பியபோதும் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுபோன்ற போலியான தகவலின் அடிப்படையில் குழநதைகளை திருப்பி அனுப்புவது தவறு. மேலும் தனக்கிருந்த கூலி வேலையும் இல்லாமல் போய்விட்டது." 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரை அணுகியபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.        

  Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka                  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.