முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி!


ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் 25 ஓட்டங்களையும் உமேஷ் யாதவ் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, செர்பேன் ருத்தர்போர்ட் 28 ஓட்டங்களையும் ஷபாஸ் அஹமட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பெங்களூர் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.