ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான முக்கிய குழு கண்டனம்!!
நேற்று அதிகாலை காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பான முக்கிய குழு மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை முழுமையாக மதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டெனேக்ரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைதியான போராட்டங்கள் எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை அங்கம் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை