இன்று எரிபொருள் விநியோகம் இல்லை!!

 


இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்றையதினம் (04-10-2022) சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோக செயற்பாட்டு செலவினங்களுக்கு கனியவள கூட்டுதாபனத்தினால் 45 சதவீத கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த கட்டண கழிவை மீளப்பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் குறைவடைந்த மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெற்றோல் விலை மாத்திரம் குறைப்பட்ட போதிலும் டீசல் விலை குறைக்கப்படாமைக்கு காரணம் என்னவென்று பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சபையின் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

மசகு எண்ணெய் சுத்தகரிப்பின் மூலம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 சதவீதம் மாத்திரமே ஈடுசெய்யப்படுகிறது 70 சதவீதம் நேரடி முடிவுப்பொருளாக எரிபொருள் இறக்குமதிசெய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.