பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

 பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவர்

படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பிற்பகல் 15.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு.ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார்.

ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் சகோதரர் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர். கேணல் பரிதி அவர்களின் புதல்வியும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல்துறை உறுப்பினர் அவர்களும் ஆற்றியிருந்ததுடன்.  லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது..

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.