மீண்டும் கொழும்பில் போராட்டம் – ஒன்று கூடும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்கிறது அமெரிக்கா !

 


கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டமானது மருதானையிலிருந்து ஆரம்பமானது. இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக மருதானையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்துமாறும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.  கொழும்பில் இன்று (2) நடத்தப்படும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் முன்னரே எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார்.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.