கப்பலில் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்!!

 


வியட்நாம் வோங் டோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


வெளிவிவகார அமைச்சு தலைமையில் இலங்கை கடற்படை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியாட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் என்பன ஒன்றிணைந்து கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தன.


பயணிகளை உறுதிப்படுத்துவதற்கான விசாரணை செயற்பாடுகள் நிறைவடைந்ததும் அவர்களை உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.