இலங்கையை தாக்கியது குரங்கு அம்மை!!



உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலுக்குள் ளாகியுள்ள குரங்கம்மை நோய்த்தொற்றுகொண்ட நோயாளியொருவர் கொழும்பில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


டுபாயிலிருந்து வந்த ஒருவர் கடந்த 2ஆம் திகதி சுகாதார அமைச்சிலுள்ள எய்ட்ஸ் நோய் சோதனைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். காய்ச்சல், சருமத்தில் புள்ளிகள்கொண்ட 20 வயதுடைய அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் அல்லாத நோயொன்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இதனையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப் பட்டார்.


குரங்கம்மை தொற்று தொடர்பில் கடந்த ஜூலை முதல் சுகாதார அமைச்சு 6 பேரிடம் பரிசோதனைகளை மேற்கொண்டது. ஏழாவதாக மேற்கொள்ளப்பட்ட நபரிடமே அந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


குரங்கம்மை தொற்று இதுவரை 109 நாடுகளைச் சேர்ந்த 77 ஆயிரத்து 753 பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


உள்நாட்டிலும் கண்டறியப்பட்டதையடுத்து தற்போது சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.