கிளிநொச்சியில் மாணவர்களின் மோசமான செயல்!!

 


கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து ஏனைய மாணவர்கள் பருக்கிய நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

போதையால் தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதேசமயம் மேற்படி மாணவனின் சக மாணவர்கள் போதைப் பழக்கமுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் எந்தவொரு போதைப்பொருள்களையும் பயன்படுத்துவதில்லை என்றும், கல்வியில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெறுபவன் என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குடிநீருடன் மதுபானத்தைக் கலந்து மாணவனைக் குடிக்குமாறு ஏனையோர் திணித்த நிலையில் சைக்கிளில் செல்லும் போது மாணவன் வீதியில் விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் உடனடியாகக் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாணவன் மாற்றப்பட்டார்.

மேலும் மாணவனுக்கு போதையூட்டிய சம்பவம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம், பொலிஸார் ஊடாக உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.

அதேவேளை தமிழர்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களிடையே போதைபழக்கம் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவன்ம் செலுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.