உலக வங்கி வெளியிட்ட தகவல்!

 


இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.


நாட்டைக் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் (Dinesh Gunawardena) கலந்துரையாடினர்.


பிரதமர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (30-11-2022) இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.


தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தி, கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என நம்புவதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.


பொருளாதார நிலைமையை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி வெளியிட்ட உலக வங்கியின் பணிப்பாளர், இடைக்கால மற்றும் நீண்ட கால முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாகவும் உறுதியளித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.